டெங்கு குருதிப்பெருக்கு என்பது சாதாரண டெங்கு நோயை விடவும் தீவிரமான ஒரு நோய் நிலைமை ஆவதுடன் இங்கு 2-7 வரையான காலத்திற்கு காய்ச்சல் நிலவக்கூடும். சாதாரண டெங்கு நோய் நிலைமையின் போது ஏற்படும் நோய் அறிகுறிகளுக்கு மேலதிகமாக இந்நோயாளிகளிடம் கடுமையான வயிற்று வலி, தடையின்றிக் காணப்படும் வாந்தி மற்றும் சுவாதிப்பதில் சிறமம் என்பன ஏற்பட இடமுண்டு
சிறு குருதிக்கலன்களுக்குள் நிகழும் சில மாற்றங்கள் காரணமாக குருதியின் திரவவிழையப் பகுதி குருதிக்கலன்கள் மூலமாக நெஞ்சு, வயிற்றுக் குழியினுள்ளே கசியக் கூடும். இந் நிலைமை பெரும்பாலும் 24 – 48 மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்படுவதுடன் அபாய நிலைமையென அழைக்கப்படுகிறது. இவ்வாறு குருதியின் திரவவிழையம் குருதிக்கலன்களினூடாக வெளியில் கசிவதன் காரணமாக குருதிப் பரும அளவில் ஒரு குறைவும் குருதி உறைதலும் ஏற்படுவதுடன் மூளை, சிறுநீரகம், ஈரல் போன்ற அத்தியவசிய அவயவங்களுக்கு வழங்கப்படும் குருதியின் அளவு குறைவடையும். இதன் காரணமாக குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு நோயாளி அதிர்ச்சி நிலைமைக்குட்படக் கூடும். இந் நிலைமையினை அடைய முன்னர் இனங்கண்டு சிகிச்சையளிக்கப்படா விடின் நோயாளி மரணிக்கவும் இடமுண்டு.